Monday, April 13, 2015

இந்திய இராணுவத்துடன் கேர்ணல் சாள்ஸ்!

சிங்கள இராணுவத்தின் அடக்கு முறைகளும் அட்டூழியங்களும் மிக அதிக அளவில் தலைவிரித்தாடிய மண் அது!

அதனால்தான் தன் பள்ளிப்படிப்புடன் ஆயுத முனைக்கு, முனையில் இருந்து வந்தான் ரவிசங்கர் என்னும் சாள்ஸ்.பயிற்சி முடிந்ததுமே அவனுக்கு களமாட கிடைத்த பெரும் வாய்ப்புத்தான் இந்திய ராணுவத்துக்கு எதிராக மோதும் வாய்ப்பு,அதுவும் வடமராச்சியில் கிடைத்தது ஆகும்.

அந்த வேளைகளில் கப்டன் மொரிஸ் என்னும் போராளியின் படை அணியில் ஒருவனாக இணைந்து சாள்ஸ் தன் போராட்ட கத்தியை தீட்டிக் கொண்டான்! 

இந்திய இராணுவம் வடமராச்சியில் அப்போது வாங்கிய அடிகளுக்கு பொறுப்பாக இருந்த நாயகன்தான் சாள்சாகும்! சாள்சுக்கு அந்த வேளைகளில் சரியான களம் அமைத்துக் கொடுத்தவர் அப்போது பருத்தித்துறைப் பொறுப்பாளர் ஆக இருந்த கப்டன் மொரிஸ் ஆகும்!

Quelle - http://www.velichaveedu.com/79141030/

No comments:

Post a Comment