Monday, April 13, 2015

கப்டன் மொறிஸ்

கப்டன் மொறிஸ் (செப்டம்பர் 12, 1969 - மே 1, 1989, மேலைப்புலோலியூர், ஆத்தியடி, பருத்தித்துறை) என்ற புனைபெயரைக் கொண்ட பரதரராஜன் தியாகராஜா ஒரு விடுதலைப் புலி போராளியாவார். இவர் தனது பதினைந்தாவது வயதில், 1984இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து, ஐந்து ஆண்டுகள் இயக்கப் பணியில் ஈடுபட்டார். குறுகிய காலப் பகுதியில் அளப்பரிய இயக்கப் பணிகளாற்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளர்[1] ஆனார். மே 1, 1989 இல் இந்திய இராணுவத்துடனான நேரடி மோதலில் வீரமரணம் அடைந்தார்.

இவர் தியாகராஜா மற்றும் சிவகாமசுந்தரி தம்பதிகளின் ஆறாவது புதல்வன். இவரது தந்தை சபாபதிப்பிள்ளை தியாகராஜா இலங்கையின் புகையிரதநிலைய அதிபராக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் பல வருடங்களாகக் கடமையாற்றியவர். இவரது அண்ணன் பிறேமராஜன் (தீட்சண்யன்) கவிஞர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் புலிகளின் குரல் வானொலிக்கு கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தவர். இவரது தம்பி மயூரன், விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினராவார். மயூரன் தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையில் நவம்பர் 11, 1993 இல் வீரமரணமடைந்தார்.

மொறிஸ் தனது கல்வியை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியிலும், புலோலி ஆண்கள் ஆங்கில பாடசாலையிலும் கற்றார்.

1984 இல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். [2] 1983 இல் தென்னிலங்கையில் நிகழ்ந்த தமிழர் படுகொலைகளும் அதனைத் தொடர்ந்து போராளிகளின் படகோட்டியாக இருந்த மறைந்த பொலிகண்டி கணேஸ்மாமா உடனான சந்திப்பும் இவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணையக் காரணமாகக் கருதப்படுகிறது.

ஆரம்ப காலங்களில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல் மற்றும் போராளிகளின் போர்க் கடமைகளுக்கு உதவுதல் போன்ற பணிகளை மேற்கொண்டார். பருத்தித்துறை, தம்பசெட்டி வீதியால் சென்று கொண்டிருந்த சிங்கள இராணுவத்தினரின் வாகனத்திற்கு ´கிரனைட்´ எறிந்து அவர்களின் ரோந்து நடவடிக்கையைத் தடை செய்ததால்,மேலிடத்தின் உடனடிக் கவனத்துக்கு உள்ளாகி சில முக்கிய பதவிகள் மொறிஸிடம் கையளிக்கப்பட்டது.

ஆற்றிய முக்கிய பணிகள்

  • 1985 இல் தொண்டைமானாற்றில் போராளிகளின் காவல் தரிப்பில் கண்விழித்துக் காவலில் ஈடுபட்டு இராணுவம் கடல் வழியாக உள்ளே நுழையாமல் எதிர்த்தாக்குதல் நிகழ்த்தும் கடமைகளில் ஈடுபட்டிருந்தார்.
  • அந்தக் காலகட்டத்திலேயே போராளிகளுக்கான விசேட இராணுவப் பயிற்சி பெற்று முதற் தடவையாக பூநகரித் தாக்குதலில் பங்கேற்று வெற்றி கண்டதுடன் நெருப்புக் காயங்களுக்கு ஆளாகி யாழ் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றார்.
  • 1986 இல் பருத்தித்துறை, கலட்டிப் பகுதியில் நியாய விலைக் கடை ஆரம்பித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரால் ஊர்மக்களுக்கு நியாய விலையில் பொருட்களை வழங்கியதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்புக்குத் தேவையான பணத்தைத் திரட்ட உதவிகள் புரிந்தார்.
  • 1987 இல் பருத்தித்துறை பிரதேசப் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. அப்பிரதேச மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதுவும் சிங்கள இராணுவத்தினர் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தும் கொடுமைகளிலிருந்து தமிழர்களைக் காப்பாற்றுவதும் இவரின் முக்கிய பணியாக அமைந்தது.
  • அதே சமயம் போர்ச்சூழலினால் நீதி மன்றங்கள் இயங்காமல் இருந்த காரணத்தினால் அமைப்பு சார்பான கிராம நீதிமன்றங்களை நிறுவி, மக்களின் பிரச்சனைகளை இலகுவாகத் தீர்த்து வைக்கும் பணியிலும் அவர் பெரு வெற்றி கண்டிருந்தார்.
  • 1988 இல் மொறிஸ் வடமராட்சி மக்களின் அன்பிற்கும் பெருநம்பிக்கைக்கும் ஆளாகியதுடன் 1987 இல் வந்திறங்கிய இந்திய இராணுவத்தினரின் பெரும் தேடுதலுக்கும் ஆளானார். இதனால் 1987 - 1988 காலப்பகுதியில் இந்திய இராணுவத்தினருக்கு எதிரான பல தாக்குதல்களை நிகழ்த்தி பெரு வெற்றி கண்டிருந்தார்.
  • இக் காலகட்டம் மக்களுக்கும், போராளிகளுக்கும் பெரும் சோதனையான காலம் என்பதால் அநேக போராளிகளின் வாழ்வு காடுகளுக்குள் நகர்ந்தது. ஆனால் அந்த இக்கட்டான நிலையிலும் பிரதேசப் பொறுப்பாளர்கள் அந்தந்த ஊர்களிலேயே இருந்து பணி புரிய வேண்டிய நிர்ப்பந்தமும் இருந்தது. அது அவர்களுக்கு மிகக் கடுமையான காலமாகவே அமையப் பெற்றிருந்தது. உணவும், உறையுளும் அற்ற கொடுமையான வாழ்வை மொறிஸ் உம் அணுவணுவாய் அனுபவித்தார்.

1989, மே 1ம் நாள், மந்திகையில் முகாமிட்டிருந்த இந்திய இராணுவம், பருத்தித்துறை துறைமுகத்தடியில் முகாமிட்டிருந்த இந்திய இராணுவம், மற்றும் வியாபாரிமூலையில் முகாமிட்டிருந்த இந்திய இராணுவம் - இம் மூன்று இராணுவமும் எட்டப்பர் கூட்டத்தினரின் உதவியுடன் மும்முனைச் சுற்றிவளைப்பில் ஈடுபட்டு மொறிஸைப் பிடிக்க வேண்டுமென்ற நோக்கில் தந்திரமான தாக்குதலை நிகழ்த்திய வேளை மொறிஸ் தனித்து நின்று போராடி... இராணுவ உயர்அதிகாரிகள் மூவரைச் சுட்டு வீழ்த்தி விட்டு ஈற்றில் பசூக்கா ஷெல்லின் தாக்குதலில் எரிகாயங்களுக்கு உள்ளாகி, அதே வேளை சயனைட்டும் அருந்தி வீரமரணம் அடைந்தார்.

கப்டன் மொறிஸ் வீரவணக்கம்


கேணல் சார்ள்ஸ்

இந்திய இராணுவத்தின் வருகையுடன் புதிய மோதல்கள் எழுந்தன. இந்திய அமைதி காக்கும் படையுடன் எல்.ரீ.ரீ.ஈ போர் தொடுத்தது. சாள்ஸ், யாழ்ப்பாண குடாநாட்டிலேயே தங்கியிருந்து கெரில்லாத் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தார். அவர் வடமராட்சி கிழக்கில் கப்டன் மொரிஸ் தலைமையில் உள்ள பிரிவில் நிலைகொண்ருந்தார்.

திங்கள், 14 ஜனவரி, 2013
 Quelle - http://marikumar.blogspot.de/2013/01/2.html

இந்திய இராணுவத்துடன் கேர்ணல் சாள்ஸ்!

சிங்கள இராணுவத்தின் அடக்கு முறைகளும் அட்டூழியங்களும் மிக அதிக அளவில் தலைவிரித்தாடிய மண் அது!

அதனால்தான் தன் பள்ளிப்படிப்புடன் ஆயுத முனைக்கு, முனையில் இருந்து வந்தான் ரவிசங்கர் என்னும் சாள்ஸ்.பயிற்சி முடிந்ததுமே அவனுக்கு களமாட கிடைத்த பெரும் வாய்ப்புத்தான் இந்திய ராணுவத்துக்கு எதிராக மோதும் வாய்ப்பு,அதுவும் வடமராச்சியில் கிடைத்தது ஆகும்.

அந்த வேளைகளில் கப்டன் மொரிஸ் என்னும் போராளியின் படை அணியில் ஒருவனாக இணைந்து சாள்ஸ் தன் போராட்ட கத்தியை தீட்டிக் கொண்டான்! 

இந்திய இராணுவம் வடமராச்சியில் அப்போது வாங்கிய அடிகளுக்கு பொறுப்பாக இருந்த நாயகன்தான் சாள்சாகும்! சாள்சுக்கு அந்த வேளைகளில் சரியான களம் அமைத்துக் கொடுத்தவர் அப்போது பருத்தித்துறைப் பொறுப்பாளர் ஆக இருந்த கப்டன் மொரிஸ் ஆகும்!

Quelle - http://www.velichaveedu.com/79141030/

இராணுவ புலனாய்வு தளபதி சாள்ஸ் அண்ணனுக்கு வீர வணக்கம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் தான் கேணல் சாள்ஸ் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கேணல் சாள்சின் வீரவணக்க நிகழ்வில் அவர் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சாள்ஸ் உண்மையில் எல்லோருக்கும் தெரியாத ஒருவர். ஆனால் எதிரிக்கு இவரை நன்கு தெரியும்.

கடந்த காலங்களில் பல வரலாற்றுத் திருப்பங்களை ஏற்படுத்திய பல வெற்றிகரமான தாக்குதல்களை தெற்கில் தளம் அமைத்து வழிநடத்திய தளபதி.

யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கேணல் கிட்டண்ணாவின் நிர்வாகத்தின் கீழ் குடாநாட்டுப் படையினர் முகாம்களுக்கு முடக்கம் காண வைக்கப்பட்ட போது பாடசாலையயில் கல்வி பயின்று கொண்டு பகுதி நேரமாக பருத்தித்துறை காவலரணில் காவலிற்காக வந்து நின்றவர் தான் சாள்ஸ்.

சிறிய வயதில் தன்னுடைய போரியல் வாழ்கையை தொடங்கியபோது அவரின் தோற்றமும் வயதும் போதாத காரணத்தால் வடமராட்சியில் போர் நெருக்கடி காரணமாக மக்களுக்கு கிடைக்கக்கூடிய பொருட்கள் கிடைக்காத பட்சத்தில் தளபதி கிட்டண்ணாவினால் தெரிவு செய்யப்பட்டிருந்த நியாய விலைக்கடையில் பொருள் விற்பனையாளராக தன்னுடைய பணியைத் தொடர்ந்தார்.

பின்னர் வடமராட்சியில் "ஒப்பரேசன் லிபரேசன்" நடவடிக்கையைச் சந்தித்த போது பருத்தித்துறை களமுனையில் இறுதிவரை நின்று போராடி பிற்பாடு விலகி மீண்டும் மில்லரின் புதிய சகாப்தத்துடன் உள்நுழைந்து சாதனை படைத்தார்.

இந்திய இராணுவம் முழுமையாக யாழ். குடாநாட்டை ஆக்கிரமித்து எல்லா இடங்களிலும் திரிந்துகொண்டிருந்த நேரம், தங்க இடமின்றி- உணவின்றி- இருப்பிடமின்றி அலைந்து திரிந்த வேளையில் பருத்தித்துறைப் பகுதிக்கு பொறுப்பாக இருந்த கப்டன் மொறிசின் தலைமையின் கீழ இந்தியப் படைக்கு எதிராக தாக்குதல்களை தொடுத்து, இந்திய இராணுவத்தின் நடவடிக்கைக்கு முகம் கொடுத்து, பின்னர் அங்கிருந்து மணலாற்றுக்கு வந்தார் சாள்ஸ். அங்கு மீண்டு ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அவர்களுடன் யாழ். குடாநாட்டுக்குச் சென்று பணியைத் தொடர்ந்தவர்.

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியப்படை வெளியேறிய பின்னர் அன்று தொடக்கம் வடமராட்சியினை தளமாகக் கொண்டு செயற்பட்ட சாள்சின் செயற்பாடு கண்டு- புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அவர்களால் அடையாளம் காணப்பட்டு- தெற்கில் தளம் அமைப்பதற்காகவும், அங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முகம் தெரியாத புலியாகச் சென்றார்.

உண்மையில் நீண்டகாலமாக தென்னிலங்கையில் நின்று வெற்றிகரமாக பல தாக்குதல்களை குறிப்பாக சிறிலங்காப் படையின் கூட்டுப்படைத் தலைமையகம் உள்ளிட்ட பல வெற்றிகரமான தாக்குதல்களை தலைமையேற்று வழிநடத்தி அங்கு சிறிலங்காப் படைகனளால் தேடப்படும் போது மட்ட்க்களப்பைத் தளமாக வைத்துக்கொண்டு பல வெற்றிகரமான தாக்குதலை மேற்கொண்டு வழிநடத்தினார்.

2001 ஆம் ஆண்டு உலகமே வியக்கத்தக்க வகையில் எந்தவொரு பொதுமகனும், வெளிநாட்டுப் பிரயாணியும் பாதிப்படையாத வகையில் கட்டுநாயக்கா வான்படைத் தளத்தினை தகர்த்து எறிவதற்காக கரும்புலி அணிக்கான நீண்டகாலப் பயிற்சியினை வழங்கி, தாக்குதலை வழிநடத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த உத்தமவீரன். ஆனால் எங்கள் மக்களுக்கு அவர் முகம் தெரியாத ஒரு தளபதி.

தொடக்க காலத்தில் தான் சார்ந்திருந்த துறையில் இருந்து கொண்டு கடற்புலிகளையும் வடக்கு-கிழக்கிற்குள் மட்டுப்படுத்தப்படாமல் தெற்கிலும் பாரிய தாக்குதலை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் சில மறைமுக கடற்கரும்புலிகளை உருவாக்கி அவர்களுக்கு புலனாய்வுத்துறையில் பணிகளை முன்னெடுத்த அதேநேரம் ஒரு அணியை உருவாக்கி அந்த அணிக்கு ஊடாக சிறிலங்காவின் காலி கடற்படைத்தளத்தை மறைமுக கடற்கரும்புலிகளைக் கொண்டு தகர்ப்பதற்காக பல ஆண்டுகளாக அப்பணியைத் தொடர்ந்து, அத்தாக்குதல் நடைபெறுகின்ற நேரம் தொடர்புகளைப் பேணி வழி நடத்திய தளபதி இன்று எம்முடன் இல்லை. ஆனால் அவரால் உருவாக்கப்பட்ட போராளிகள் கண்டிப்பாக அவரின் கனவுகளை சுமந்து இப்போரியலை முன்னெடுத்துச் செல்வர்.

சாள்ஸ் தாக்குதலிலும் நடவடிக்கைகளிலும் மட்டும் விற்பனர் அல்ல. எல்லோரோடும், தலைவர் அவர்களுடனும் நட்பு உரிமையுடன் பழகுகின்றவர். இவர் தனித்துவமாக தெற்கில் மட்டும் தகாக்குதலை தீவிரப்படுத்தவில்லை. யாழ். குடாநாட்டிலும் தாக்குதலை முன்னெடுத்து புதிய படைய புலனாய்புப் போராளிகளைக் கொண்டு முகமாலை முன்னரங்க நிலைகளை உடைத்து முன்னேறுகின்ற நடவடிக்கையிலும் அணியை வழிநடத்தியவர் இன்று இல்லை.

இன்றை சூழ்நிலையில் இவரின் இழப்பு விடுதலைப் போராட்த்திற்கு பாரிய இழப்பாகவும் உள்ளது. எமது விடுதலைப் போராட்டம் பல தளபதிகளையும் துறைசார் பொறுப்பாளர்களையும் இழந்து நிற்பினும் படிப்படியாக பல வெற்றிகரமான நடவடிக்கைகளை முன்னெடுத்துக்கொண்டு வருகின்றது.

இழப்புக்களை தாங்கிக்கொள்வது கடினம். ஆனால் இழப்புக்கள் இல்லாமல் விடுதலையை பெற்றுவிட முடியாது. நிச்சயமாக சாள்சின் கனவினையும் விடுதலைப் போராட்டத்தின் எண்ணத்தையும் முன்னெடுத்து எமது விடுதலைப் போராட்டத்தை வீச்சாக்குவோம் என்றார் அவர்.

http://www.puthinam....3g2dZ0cc3uk0Jde

------------------------------------------------------------------------------------

வந்தி

Posted 07 ஜனவரி 2008 - 11:52 காலை
ஈழவன்85, on Jan 7 2008, 12:34 PM, said:
இராணுவ புலனாய்வு தளபதி சாள்ஸ் அண்ணனுக்கு வீர வணக்கம்

இந்திய இராணுவம் முழுமையாக யாழ். குடாநாட்டை ஆக்கிரமித்து எல்லா இடங்களிலும் திரிந்துகொண்டிருந்த நேரம், தங்க இடமின்றி- உணவின்றி- இருப்பிடமின்றி அலைந்து திரிந்த வேளையில் பருத்தித்துறைப் பகுதிக்கு பொறுப்பாக இருந்த கப்டன் மொறிசின் தலைமையின் கீழ இந்தியப் படைக்கு எதிராக தாக்குதல்களை தொடுத்து, இந்திய இராணுவத்தின் நடவடிக்கைக்கு முகம் கொடுத்து, பின்னர் அங்கிருந்து மணலாற்றுக்கு வந்தார் சாள்ஸ். அங்கு மீண்டு ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அவர்களுடன் யாழ். குடாநாட்டுக்குச் சென்று பணியைத் தொடர்ந்தவர்.
http://www.puthinam....3g2dZ0cc3uk0Jde
மொறிஸ் அண்ணா பிரபல வலைப்பதிவாளர் ஒருவரின் சகோதரர். அத்துடன் அவரது தாக்குதல்கள் சில்வற்றை நேரிலும் பார்த்த அனுபவம் உண்டு. கல்லூரி வீதியில் மொறிஸ் அண்ணாவின் சாகசங்கள் பிரபலமானவை
இணையதளபதி - வந்தி
 

செப்டம்பர் 12 – வரலாற்றில் இன்று!

1921 – நள்ளிரவில் பாரதியாரின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் சுமார் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1943 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி வீட்டுக்காவலிலிருந்து ஜெர்மனிய படைத்தளபதி “ஒட்டோ ஸ்கோர்செனி என்பவனால் விடுவிக்கப்பட்டார்.

1969 – விடுதலைப் புலிகளின் போராளி, கப்டன் மொறிஸ் பிறந்ததினம்.

1974 – எதியோப்பியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மன்னர் ஹைலி செலாசி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1977 – தென்னாபிரிக்காவின் நிறக்கொள்கைக்கெதிராக போராடிய ஸ்டீவ் பைக்கோ காவற்துறையினரின் காவலில் இருந்தபோது கொல்லப்பட்டார்

Quelle - http://tamilsnow.com/?p=23320.